மாவட்ட செய்திகள்

திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் இருதரப்பினர் இடையே மோதல்; போலீசார் வழக்குப்பதிவு

கூத்தாநல்லூர் அருகே திருமண பத்திரிகையில் பெயர் போடாததால் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் தந்தை-மகன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.போலீஸ்சார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

கூத்தாநல்லூர்,

கூத்தாநல்லூர் அருகே உள்ள கிளியனூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கனகவேல் (வயது 27). விவசாயி. இவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. திருமண பத்திரிகையில் இவருடைய உறவினர்களான அதே பகுதியை சேர்ந்த அண்ணன்- தம்பிகளான அய்யப்பன் (25), விஜயகுமார்(22), வினோத் குமார் (20) ஆகிய 3 பேரின் பெயரையும் கனகவேல் போடவில்லை. இதனால் கனகவேல் மீது அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 3 பேரும் கோபத்தில் இருந்து வந்தனர்.

இந்த நிலையில் அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகியோரின் தாயார் நீலாவதி, கனகவேல் வீட்டிற்கு சென்று பேசிக்கொண்டு இருந்தார். இதனைப்பார்த்த 3 பேரும் சேர்ந்து நம்மை மதிக்காதவன் வீட்டில் எதற்காக வந்து பேசிக்கொண்டு இருக்கிறாய் என்று நீலாவதியை திட்டியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கனகவேல் மற்றும் அவருடைய தந்தை ராதா ஆகிய 2 பேரும், அவர்களை தட்டிக்கேட்டனர். இதையடுத்து இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதனால் ஒருவரை ஒருவர் அரிவாள் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கிக்கொண்டனர்.

இதில் படுகாயம் அடைந்த கனகவேல் மற்றும் அவரது தந்தை ராதா 2 பேரும் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும், அய்யப்பன், விஜயகுமார், வினோத்குமார் ஆகிய 3 பேரும் மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து வடபாதிமங்கலம் போலீசில் கனகவேல் மற்றும் வினோத்குமார் தனித்தனியே புகார் அளித்துள்ளனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு