செய்திகள்

மதுரவாயல் அருகே உயர்அழுத்த மின் கம்பியில் உரசி கன்டெய்னர் லாரி தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

மதுரவாயல் அருகே சென்ற போது மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பியில் கன்டெய்னர் லாரியின் மேல்பகுதி உரசியது. இதில் கன்டெய்னரில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் இருந்த பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் சோபா, மெத்தை தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து சோபா மற்றும் மெத்தை தயாரிக்க பயன்படும் பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு கன்டெய்னர் லாரி நேற்று காலை சென்னை வந்தது.

மதுரவாயல், கார்த்திகேயன் நகர், ஆஞ்சநேயர் தெரு அருகே சென்ற போது மேலே சென்ற உயர்அழுத்த மின் கம்பியில் கன்டெய்னர் லாரியின் மேல்பகுதி உரசியது. இதில் கன்டெய்னரில் மின்சாரம் பாய்ந்ததால் அதில் இருந்த பஞ்சு உள்ளிட்ட மூலப்பொருட்கள் தீப்பிடித்து எரிந்தது.

உடனடியாக லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் நாகராஜ் (வயது 39) கீழே இறங்கி விட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த கோயம்பேடு தீயணைப்பு நிலைய வீரர்கள், முதலில் அந்த பகுதியில் மின் இணைப்பை துண்டித்தனர். பின்னர் கன்டெய்னர் லாரியில் எரிந்த தீயை அணைத்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு