தேசிய செய்திகள்

ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் சாவு

ஏரியில் மூழ்கி சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் தாலுகா கோர்தகுந்தா ஏரிப்பகுதியை சேர்ந்தவர் சலீம் உசைன் (வயது 32). இவர் தனது சகோதரரின் மகன் யாசீனுடன் குடிமராமத்து பணிக்கு சென்றார். அவர் வேலையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது, சிறுவன் யாசீன் அருகில் உள்ள ஏரிக்கு தண்ணீர் குடிக்க சென்றான். யாசீன் ஏரியில் இறங்கியபோது எதிர்பாராதவிதமாக கால் தவறி உள்ளே விழுந்தான். இதனால் அவன் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தான். அவனது கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சலீம் உசைன் விரைந்து ஏரியில் குதித்து காப்பாற்ற முயன்றார். ஆனாலும் அவரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனாலும் அதற்குள் 2 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ராய்ச்சூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு