தேசிய செய்திகள்

சத்தீஸ்கரில் பஸ் கவிழ்ந்து விபத்து: குழந்தைகள் உட்பட 40 பேர் காயம்

சத்தீஸ்கரில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் குழந்தைகள் உட்பட 40 பேர் காயமடைந்தனர்.

தினத்தந்தி

மோஹ்லா,

அம்பகர் சௌகி மேம்பாட்டுத் தொகுதியில் உள்ள விசார்பூர் கிராமத்தில் வசிக்கும் மஹர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தொண்டி லோஹாரா பகுதியில் உள்ள கிராமத்திற்குப் பஸ் ஒன்றில் சென்றனர். அப்போது பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அம்பகர் சௌகியில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இது தொடர்பாக தொகுதி மருத்துவ அதிகாரி டாக்டர் துர்வே கூறும்போது, "தற்போது 13 குழந்தைகள் மற்றும் 27 பெண்கள் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். படுகாயமடைந்த மூன்று பெண்கள் ராஜ்நந்த்கான் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்" என்று கூறினார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு