கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் சுமார் 5 கோடி கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு - மத்திய அரசு தகவல்

மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் சுமார் 5 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டத்தில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகித்து வருகிறது.

அந்த வகையில் இதுவரையில் 64.65 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வினியோகித்துள்ளது. பயன்படுத்தியது போக இன்னும் 4 கோடியே 78 லட்சத்து 94 ஆயிரத்து 30 தடுப்பூசிகள், மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் கையிருப்பாக உள்ளன. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்