தேசிய செய்திகள்

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி முறையாக பெறப்பட்டது; டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

‘சென்ட்ரல் விஸ்டா' திட்டத்தை, சிறு சிறு திட்டங்களாக பிரித்து தடையில்லா சான்றிதழ்கள் பெறுவதிலிருந்து விலக்கு பெறப்பட்டதா? என்றும் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? என்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர வளர்ச்சித்துறை மந்திரி ஹர்தீப் சிங் புரியிடம், தி.மு.க. நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஹர்தீப் சிங் புரி பதில் அளித்து கூறியதாவது:-

சுற்றுச்சூழல் அனுமதி உள்பட அனைத்து தடையில்லா சான்றிதழ்களும் உரிய முறைப்படியே சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கான அனைத்து சிறு சிறு திட்டங்களுக்கும் பெறப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான சுற்றுச்சூழல் அனுமதி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் 17-ந்தேதியே பெறப்பட்டது. சென்ட்ரல் விஸ்டா' திட்டம், மத்திய மாநாட்டு மையம், பிரதமர் இல்லம், சிறப்பு பாதுகாப்புக்குழு கட்டிடம், துணை ஜனாதிபதி இல்லம் ஆகிய சிறு சிறு திட்டங்களுக்கான, சுற்றுச்சூழல் அனுமதி கடந்த மே 31-ந்தேதி பெறப்பட்டது.

சென்ட்ரல் விஸ்டா' திட்டத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் முறையாக நடத்தப்பட்டன. பிரதமர் அலுவலகம், அமைச்சரவை செயலகம், தேசிய பாதுகாப்புக்குழு செயலகம் ஆகியவற்றுக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள், நிபுணர் குழுவின் பார்வைக்கு அனுப்பப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையுடன் சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்