தேசிய செய்திகள்

மியான்மரில் சுரங்கத்தில் நில சரிவு; 27 தொழிலாளர்கள் பலி

மியான்மர் நாட்டில் சுரங்கம் ஒன்றில் ஏற்பட்ட நில சரிவில் சிக்கி 27 தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர்.

யாங்கன்,

மியான்மர் நாட்டின் வடக்கே கச்சின் மாநிலத்தில் தங்கம், பச்சை மாணிக்க கல் ஆகியவற்றிற்கான சுரங்கங்கள் உள்ளன. இங்கு பழங்குடியின மக்களான ரவாங் பிரிவினர் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், அந்த பகுதியில் கனமழை பெய்து வந்துள்ளது. இதில், செட் மூ என்ற பகுதியில் அமைந்த பச்சை மாணிக்க கல்லுக்கான சுரங்கத்தில் நில சரிவு ஏற்பட்டு உள்ளது. இதற்குள் சிக்கி 27 தொழிலாளர்கள் பலியாகி இருக்க கூடும் என கூறப்படுகிறது.

எனினும் எந்த உடல்களும் கண்டெடுக்கப்படவில்லை என்றும் செஞ்சிலுவை அமைப்பு மற்றும் தீயணைப்பு வீரர்களுடன் இணைந்து இன்று மீண்டும் தேடுதல் பணி நடைபெறும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் கச்சின் மாநிலத்தின் பகந்த் பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் 100க்கும் கூடுதலானோர் பலியாகினர். இந்த வருடம் நடந்த நில சரிவுகளில் சிக்கி 12க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு