புதுடெல்லி,
மகாவீர் ஜெயந்தி (29ம் தேதி), புனிதவெள்ளி(30-ம் தேதி), (ஏப்ரல் 1-ம் தேதி)வார விடுமுறை, ஏப்ரல் 2 ஆம் தேதி வங்கி ஆண்டு கணக்கு முடியும் நாள் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினங்களாகும்.
ஆனால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளித்தால், மக்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்வதில் பாதிப்பு உண்டாகும் என்பதால், நாளை (மார்ச் 31- ம்தேதி ) சனிக்கிழமை இரவு 8 மணிவரை அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தவிர, ஆன்லைன் பரிவர்த்தனைகள் இரவு 12 மணிவரை செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவோரின் வசதிக்காக நாளை இரவு 8 மணி வரை வங்கிகள் செயல்பட வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.