தேசிய செய்திகள்

பறவை மோதல்; லக்னோ-கொல்கத்தா விமானம் அவசர தரையிறக்கம்

லக்னோவில் இருந்து கொல்கத்தா புறப்பட்டு சென்ற விமானம் பறவை மோதலால் லக்னோ விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.

லக்னோ,

உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் இருந்து ஐ5-319 என்ற ஏர் ஆசியா விமானம் இன்று கொல்கத்தா நகரம் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், விமானம் உயரே எழும்பிய சிறிது நேரத்தில் அதன் மீது பறவை ஒன்று மோதி உள்ளது. இதனால், உடனடியாக மீண்டும் லக்னோ விமான நிலையத்திற்கே விமானம் திரும்பியது. இதில், விமானத்திற்கு மற்றும் யாருக்கேனும் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறதா? என்பது பற்றி பரிசோதனை நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, பயணிகளை வேறு விமானத்தில் அனுப்பி வைப்பதற்கான முயற்சிகளில் விமான நிறுவனம் ஈடுபட்டு உள்ளது.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு