தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் பெண் பலி

உத்தரபிரதேசத்தில் சி.ஏ.ஏ. போராட்டத்தில் பெண் ஒருவர் பலியானார்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள சாந்தாகார் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சி.ஏ.ஏ.) எதிரான போராட்டத்தில் லக்னோவை சேர்ந்த பரிதா (வயது 50) என்ற பெண் கலந்து கொண்டார். அப்போது கனமழை பெய்ததால் பரிதா உள்ளிட்ட போராட்டக்காரர்கள் நனைந்தபடி தங்களது தர்ணாவை தொடர்ந்தனர்.

இந்தநிலையில் மாரடைப்பு ஏற்பட்டு பரிதா திடீரென உயிரிழந்தார்.

SCROLL FOR NEXT