தேசிய செய்திகள்

மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார்-பஸ் மோதல்; 4 பேர் பலி

மராட்டியத்தில் நெடுஞ்சாலையில் கார் மற்றும் பஸ் மோதி கொண்டதில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

மும்பை,

குஜராத்தில் இருந்து மராட்டியத்தின் மும்பை நகர் நோக்கி கார் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்நிலையில், மராட்டியத்தின் பால்கார் மாவட்டத்தில் தஹானு பகுதியில் மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்து உள்ளது.

கார், அதிகாலை 4 மணியளவில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து உள்ளது. இதில், எதிர்திசையில் வந்த சொகுசு பஸ் ஒன்றின் மீது மோதி விபத்தில் சிக்கி உள்ளது.

இந்த சம்பவத்தில் அந்த இடத்திலேயே 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனை தொடர்ந்து தகவல் அறிந்து போலீசார் அந்த பகுதிக்கு சென்று உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்