தேசிய செய்திகள்

11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு

இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்த சார் பதிவாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

கோலார்

நிலம் அபகரிப்பு

கோலார் தாலுகா ஹூத்தூர் அருகே திப்பசந்திரா பகுதியில் 11 ஏக்கர் நிலத்தை கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் அபகரித்து இருப்பதாக கூறி அதே கிராமத்தை சேர்ந்த நவீன்குமார் என்பவர், கோலார் போலீசில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள புகாரில், கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் இறந்தவர்களின் பெயரில் போலி ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர்.

இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

வழக்குப்பதிவு

இந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது கோலார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் இறந்தவர்களின் பெயரில் போலியாக ஆவணங்களை தயாரித்து 11 ஏக்கர் நிலத்தை அபகரித்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கோலார் போலீசார் சார் பதிவாளர் பிரசாந்த் குமார் உள்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனால் அவர்கள் கைது செய்யப்படலாம் என  தெரிகிறது. 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு