தேசிய செய்திகள்

கர்நாடக சட்ட சபை முன்பு கோமியம் தெளித்து சிறப்பு பூஜைகள் செய்த காங்கிரஸ் தொண்டர்கள் !

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை வென்று, காங்கிஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 இடங்களை வென்று, காங்கிஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. கடந்த 20-ந் தேதி முதல்-மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமாரும் பதவி ஏற்றுகொண்டனர். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின் முதல் சட்டசபை கூட்டம் இன்று விதான சவுதாவில் கூடியது. சட்டசபை கூடுவதற்கு முன்னதாக விதான சவுதா முன்பு காங்கிரஸ் பிரமுகர்கள் சிலர் குவிந்தனர்.

அவர்கள் விதான சவுதாவின் முன்பகுதியில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அப்போது அவர்கள் கோமியத்தை தெளித்து, பூஜையில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், காங்கிரஸ் கட்சி புதிதாக ஆட்சி அமைத்துள்ளது. இன்று காங்கிரஸ் கட்சியின் முதல் சட்டசபை கூட்டம் நடந்தது. மேலும், பா.ஜனதாவின் ஊழல் ஆட்சியை முடிக்கப்பட்டுவிட்டதும். எனவே விதான சவுதாவை தூய்மைபடுத்துவதற்காக இங்கு கேமியம் தெளிக்கப்பட்டது என்றனர். 

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு