தேசிய செய்திகள்

புதிதாக பதவியேற்ற மராட்டிய மந்திரியை வரவேற்க பள்ளி மாணவர்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சர்ச்சை

மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் புதிய மந்திரியாக பதவியேற்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அணில் பைதாஸ் பட்டேல், தனது சொந்த ஊரான ஜல்கான் மாவட்டம் அமால்னர் பகுதிக்கு வருகை தந்தார். அவரை வரவேற்பதற்காக பள்ளி மாணவ, மாணவிகளை சாலையோரம் வெயிலில் அமரவைத்துள்ளனர்.

நீண்ட தாமதத்திற்குப் பிறகு வந்த மந்திரியை தரையில் அமர்ந்திருந்த மாணவர்கள் எழுந்து சல்யூட் அடித்து வரவேற்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், மந்திரியை வரவேற்பதற்காக பள்ளி மாணவர்களை சாலையோரம் நீண்ட நேரம் வெயிலில் அமரவைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு