தேசிய செய்திகள்

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2000 ரூபாயை எட்டும்: மம்தா பானர்ஜி

ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஏப்ரல் இறுதிக்குள் மத்திய அரசு கட்டி முடிக்க வேண்டும் என மம்தா கெடு விதித்துள்ளார்.

தினத்தந்தி

கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலம் ஜார்கிராம் மாவட்டத்தில்நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:-

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்றால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ.1500 அல்லது ரூ.2000 ஆக உயர்த்தலாம். அதன்பிறகு நாமெல்லாம் விறகு அடுப்பை பயன்படுத்தும் பழைய நடைமுறைக்கு திரும்ப வேண்டும்.

மத்திய அரசு. ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளை ஏப்ரல் இறுதிக்குள் கட்டி முடிக்க வேண்டும். இல்லையென்றால் மே மாதத்திலிருந்து எங்கள் அரசாங்கம் அந்த வீடுகளை கட்டத் தொடங்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்