கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

உத்தரபிரதேசம்: பா.ஜனதா எம்.பி.க்கு கோர்ட்டு வாரண்டு

உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா எம்.பி.க்கு கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பஸ்தி தொகுதி பா.ஜனதா எம்.பி. ஹரிஷ் திவிவேதி. கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கும், அவருடைய 2 சகோதரர்களுக்கும் எதிராக பஸ்தி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு, எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் இருந்து 3 தடவை ஹரிஷ் திவிவேதிக்கும், 2 சகோதரர்களுக்கும் கோர்ட்டு வாரண்டு பிறப்பித்தது. ஆனால் 3 பேரும் ஆஜராகவில்லை.

இந்தநிலையில், 3 பேருக்கும் கோர்ட்டு புதிதாக வாரண்டு பிறப்பித்துள்ளது. 22-ந் தேதிக்குள் 3 பேரிடமும் வாரண்டை ஒப்படைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே, கோர்ட்டு சொல்லும் நேரத்தில் ஆஜராவேன் என்று ஹரிஷ் திவிவேதி எம்.பி. கூறியுள்ளார்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை