தேசிய செய்திகள்

நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம்: சாலைமறியலில் ஈடுபட்ட 2,400 பேர் கைது

நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினத்தந்தி

ஹேக்,

காலநிலை மாற்றம் என்பது தற்போது உலகம் சந்திக்கும் பெரும் பிரச்சினையாக கருதப்படுகிறது. இதற்கு தீர்வு காண கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நெதர்லாந்து நாட்டில் புதை படிவ எரிபொருட்களை பிரித்தெடுக்கும் நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. இதனால் அரசாங்கத்தை எதிர்த்து ஆயிரக்கணக்கான சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் திரண்டனர். அவர்கள் அங்குள்ள ஏ-12 நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக்குண்டு வீசி கலைத்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்து 400 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு