தேசிய செய்திகள்

‘வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்’ - டி.கே.சிவக்குமாரின் மனைவி- தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ்

வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என டி.கே.சிவக்குமாரின் மனைவி மற்றும் தாயாருக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பெங்களூரு,

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டார். விசாரணைக்கு பிறகு அவர் டெல்லி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் கைது செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது.

இந்தநிலையில் டி.கே.சிவக்குமாரின் மனைவி மற்றும் தாயாருக்கு தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வருகிற 17-ந்தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று அதில் அமலாக்கத்துறை கூறியுள்ளது. இதன் காரணமாக டி.கே.சிவக்குமாருக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு