தேசிய செய்திகள்

பெங்களூருவில் சொந்த வீட்டுமனை உள்ளவர்கள் வீடு கட்ட நிதி உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு - மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் தகவல்

சொந்த வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி பெறுவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி சிறப்பு கமிஷனர் ராம்பிரசாத் மனோகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விண்ணப்பிக்க வாய்ப்பு

பெங்களூரு மாநகராட்சி எல்லைக்குள் சொந்த வீட்டுமனை உள்ளவர்களுக்கு வீடு கட்ட ரூ.5 லட்சம் நிதி உதவி அளிக்கப்படுகிறது. பி.யூ.சி., டிகிரி மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கப்படுகிறது. கண் பார்வையற்றோருக்கு ஸ்மார்ட் ஊன்றுகோல், அவர்களுக்கு மடிக்கணினி, மூத்த குடிமக்களுக்கு மடிக்கும் வகையை சேர்ந்த சக்கர நாற்காலி போன்றவை தகுதியானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் பயன்களை பெறுவதற்கு தகுதியானவர்கள் வருகிற 19-ந் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இதற்கான காலஅவகாசம் மேலும் 12 நாட்கள் அதிகரிக்கப்பட்டு வருகிற 31-ந் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு ஒன் மையங்கள்

இது மட்டுமின்றி பெண்களுக்கு நடமாடும் உணவகம் வாங்க நிதி உதவி, பணிக்கு செல்லும் பெண்களுக்கு இருசக்கர வாகன நிதி உதவியும் அளிக்கப்படுகிறது. இந்த 2 திட்டங்களுக்கு வருகிற நவம்பர் மாதம் 18-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தகுதியானவர்கள் https//welfare.bbmpgov.in என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது பெங்களூரு ஒன் மையங்கள் மூலம் கட்டணம் ரூ.30 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இணை கமிஷனர் அலுவலகங்களில் இதற்காக உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ராம்பிரசாத் மனோகர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது