தேசிய செய்திகள்

பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை

சாகா அருகே,மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததால் பழ வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்,

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் டவுன் பகுதியில் வசித்து வந்தவர் தாஹீர் (வயது 35). இவர் அதே பகுதியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் தாஹீருக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது தாஹீரின் மனைவி கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து தாஹீர், தனது மனைவியை செல்போனில் தொடர்புகொண்டு குடும்பம் நடத்த வரும்படி அழைத்துள்ளார். ஆனால் அவரது மனைவி குடும்பம் நடத்த வர மறுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த தாஹீர், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த நிலையில் நீண்ட நாட்களாக தாஹீரின் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், ஜன்னல் வழியாக பார்த்தனர்.

அப்போது வீட்டுக்குள் தாஹீர் அழுகிய நிலையில் தூக்கில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சாகர் போலீசார் தாஹீரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சாகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு