தேசிய செய்திகள்

‘லுக் அவுட்’ சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டு எத்தனை பேர் மீது நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது? - தயாநிதிமாறன் எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்

‘லுக் அவுட்’ சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டு எத்தனை பேர் மீது நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது? என்ற தயாநிதிமாறன் எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.

புதுடெல்லி,

மத்திய சென்னை தொகுதி தி.மு.க. எம்.பி. தயாநிதிமாறன், 2014-ம் ஆண்டு முதல் மத்திய அரசினால் பொருளாதார குற்றவாளிகள் எனவும், அவர்கள் நாட்டை விட்டு தப்பிக்க முடியாதபடி லுக் அவுட் சுற்றறிக்கை அறிவிக்கப்பட்டு, பின்னர் இதுவரை எத்தனை நபர்கள் மீது அந்த நடவடிக்கை திரும்பப்பெறப்பட்டது? என்ன காரணத்தினால் திரும்பப்பெறப்பட்டது? என நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்து உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறும்போது, ஏற்கனவே உள்ள அறிவுறுத்தல்களின்படி லுக் அவுட் சுற்றறிக்கை அங்கீகரிக்கப்பட்ட தோற்றுவிப்பாளரின் வேண்டுகோளின் பெயரில் குடியுரிமை பணியகத்தால் திருத்தப்படலாம், நீக்கப்படலாம் அல்லது திரும்பப்பெறப்படலாம்.

பல்வேறு காரணங்களுக்காக, குற்றங்களுக்காக மாஜிஸ்திரேட்டு, போலீஸ் சூப்பிரண்டு, பொதுத்துறை வங்கி தலைவர் உள்பட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளின் லுக் அவுட் சுற்றறிக்கை தொடர்பாக அறிவிக்கலாம். பொருளாதார குற்றங்கள் தொடர்பான லுக் அவுட் சுற்றறிக்கை தகவல்கள் தனியாக பராமரிக்கப்படுவதில்லை என்றார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்