எனவே பிரதமரை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற நோக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீநகரில் இருந்து டெல்லி நோக்கி நடைபயணம் தொடங்கி இருக்கிறார். சுமார் 815 கி.மீ. தொலைவிலான இந்த பயணத்தில் 200-க்கும் மேற்பட்ட கி.மீ. தொலைவை கடந்து நேற்று உதம்பூரை அடைந்தார்.
அப்போது தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பிரதமர் மோடியின் மிகப்பெரிய ரசிகன் நான். கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக வலைத்தளத்தில் அவரை நான் பின்தொடர்கிறேன். அவரது பேச்சும், செயலும் என் இதயத்தை தொட்டுள்ளன என்று கூறினார். கடந்த 2 ஆண்டுகளாக பிரதமரை சந்திக்க முயன்றும் முடியாமல் போகவே இந்த முறை கடினமான பயணத்தை தொடங்கியிருப்பதாக கூறிய நசிர் ஷா, இந்த முறை அவரை சந்திக்க முடியும் என நம்புவதாகவும், அப்படி சந்தித்தால் தனது கனவு நிறைவேறும் எனவும் உறுதிபட தெரிவித்தார்.