தேசிய செய்திகள்

பீகாரில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் தொகுதி பங்கீடு அறிவிப்பு

மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

தினத்தந்தி

பாட்னா,

பீகார் மாநிலத்தில் பா.ஜனதா-ஐக்கிய ஜனதாதளம் கூட்டணியின் நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில், பா.ஜனதாவுக்கு 17 தொகுதிகளும், ஐக்கிய ஜனதாதளத்துக்கு 16 தொகுதிகளும், சிராக் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகியவை தலா ஒரு தொகுதியில் போட்டியிடும் என்று பீகாருக்கான பா.ஜனதா தேர்தல் பொறுப்பாளர் வினோத் தாவ்டே நிருபர்களிடம் கூறினார்.

மத்திய மந்திரி பசுபதி பராஸ் தலைமையிலான லோக் ஜனசக்தி பிரிவுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது