நாக்பூர்,
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. மாநிலத்தலைநகரான மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது. நேற்று இரவு பெய்த பலத்த மழையால், தாழ்வான இடங்களில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மராட்டிய மாநில சட்டப்பேரவை அமைந்துள்ள நாக்பூரிலும் மழை வெளுத்து வாங்கியது. இதனால், விதன் பவனிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடியதும், சட்டப்பேரவைக்கு மின்விநியோகம் அளிக்கும் பிரதான ஸ்விட்ச் பாக்ஸ் பகுதி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், பேரவை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ஹரிபாவு பாக்டே தெரிவித்தார்.