தேசிய செய்திகள்

மாநில அரசு வரியை உயர்த்தியது மேகாலயாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

மேகாலயாவில் பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்த மாநில அரசு முடிவு செய்து உள்ளது.

ஷில்லாங், 

மாநிலத்தில் பெட்ரோலுக்கான வரி லிட்டர் ஒன்றுக்கு 13.5 சதவீதம் அல்லது ரூ.11 ஆகியவற்றில் எது அதிகமோ, அதுவே வரியாக விதிக்கப்பட்டு வந்தது. தற்போது இது 13.5 சதவீதம் அல்லது ரூ.12 ஆகியவற்றில் எது அதிகமோ அதுவே வரியாக மாற்றியமைக்கப்படுகிறது.

இதைப்போல டீசல் விலையும் லிட்டருக்கு 5 சதவீதம் அல்லது ரூ.4, இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 5 சதவீதம் அல்லது ரூ.5.50 இதில் எது அதிகமோ அதுவே வரியாக விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய விலைப்படி பிர்னிகாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.95.1 ஆகவும், ஷில்லாங்கில் ரூ.96.83 ஆகவும் உயர்ந்துள்ளது. டீசல் விலையும் முறையே ரூ.83.5, ரூ.84.72 ஆக அதிகரித்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு