தேசிய செய்திகள்

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

வருகிற ஞாயிற்றுக்கிழமை மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.

புதுடெல்லி,

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசி இருப்பதாவது;

”மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-வது முறையாக தாக்கல் செய்யும் முதல் பெண் நிதி மந்திரி இவரே. இது, இந்தியாவின் நாடாளுமன்ற வரலாற்றில் ஒரு பெருமைக்குரிய விஷயமாகப் பதியப்படும். “

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய், 10 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். அதேபோல, ப. சிதம்பரம், ஒன்பது முறை பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார், ஆனால் அவர்கள் தொடர்ச்சியாக பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு