தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசல் வரி தலா ரூ.1 குறைப்பு

மேற்கு வங்காளத்தில் பெட்ரோல், டீசலுக்கான வரி தலா 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

கொல்கத்தா,

மேற்கு வங்காள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வரி தலா 1 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவில் இருந்து வரி குறைப்பு அமலுக்கு வந்துள்ளது. அதனால், அவற்றின் விலையும் தலா 1 ரூபாய் குறைந்தது.

இதுகுறித்து மேற்கு வங்காள மாநில நிதி மந்திரி அமித் மித்ரா கூறியதாவது:-

இந்த விலை குறைப்பால் மக்களின் சுமை சிறிது குறையும். ஒரு லிட்டர் பெட்ரோல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.32.90 வருவாய் கிடைக்கிறது. ஆனால் மாநில அரசுக்கு ரூ.18.46 மட்டுமே கிடைக்கிறது. ஒரு லிட்டர் டீசல் மூலம் மத்திய அரசுக்கு ரூ.31.80-ம், மாநில அரசுக்கு ரூ.12.77-ம் கிடைக்கிறது.

மாநில அரசுகளுடன் வருவாய் பகிர்வை தவிர்க்கவே மத்திய அரசு கூடுதல் வரியை விதித்துள்ளது. இது, கூட்டாட்சி முறைக்கு எதிரானது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்