புதுச்சேரி,
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட கனமழை அதிகம் பெற கூடிய தென்மாநிலங்கள் பெரிய அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன.
இந்த நிலையில், கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களை புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் வழங்கியுள்ளார்.
இதன்பின்பு அவர்களுடன் இன்று மதிய உணவும் சாப்பிட்டு உள்ளார். அவர்களுக்கு உணவும் வழங்கினார். முகாமில் தங்கியுள்ள நபர்களின் குழந்தைகளுக்கு புத்தகங்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கியுள்ளார்.