தேசிய செய்திகள்

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக நிலக்கரி விநியோகம் - ரெயில்வே சாதனை!

மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக கூடுதல் ரெயில்கள் இயக்கப்பட்டன.

தினத்தந்தி

புதுடெல்லி,

மின் உற்பத்தி நிலையங்களுக்கு கூடுதலாக 111 மில்லியன் டன் நிலக்கரி வழங்கி ரெயில்வே சாதனை படைத்துள்ளது. கூடுதல் பெட்டிகள் மூலம் கொண்டு சென்று ரெயில்வே இதனை சாத்தியமாக்கியுள்ளது.

மின் உற்பத்தி நிலையங்கள் முழுவதும் நிலக்கரியை விரைவாக வழங்குவதை உறுதிசெய்வதற்காக நிலக்கரி போக்குவரத்தை அதிகரிக்க கூடுதல் ரெயில்கள் மற்றும் பெட்டிகள் இயக்கப்பட்டன.

இதன்மூலம், ரெயில்வே நிர்வாகம் நிலக்கரி போக்குவரத்தை அதிகரித்துள்ளது. இதனால் கடந்த செப்.21 முதல் மார்ச்.22 வரை 32 சதவீதம் கூடுதல் நிலக்கரி கொண்டு சென்று சாதனை படைத்துள்ளது.

ரெயில்வே நிர்வாகம் நிலக்கரி போக்குவரத்தில் சாதனையாக, 111 மில்லியன் டன் அதிகரித்து மொத்தம் 653 மில்லியன் டன் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு