தேசிய செய்திகள்

மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்

கடத்தல் சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

மும்பை,

மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் 45 கோடி போதைப்பொருள், தங்கம் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 12 பேர் கைதாகினர். பாங்காக்கில் இருந்து பல்வேறு விமானங்களில் புளி பாக்கெட்டுகளுக்கு இடையில் மறைத்து கடத்தப்பட்ட 37 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாங்காக்கில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து கடத்தப்பட்ட 6 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம், மற்றொரு நபரிடம் இருந்து 88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் வலையமைப்புகள் குறித்து கண்டறிய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு