தேசிய செய்திகள்

உத்தரபிரதேசத்தில் 6 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது

கைது செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

தினத்தந்தி

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 6 வயது சிறுமி தனது வீட்டுக்கு அருகே 2 சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது 2 சிறுவர்களும் திடீரென அந்த சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்துக்கு தூக்கி சென்றனர்.

பின்னர் சிறுவர்கள் 2 பேரும் சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர். வீடு திரும்பிய சிறுமி தனது தாயிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பிரிவு 376 (கற்பழிப்பு) மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து 10 மற்றும் 12 வயதான இரண்டு சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். முன்னதாக சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதில் பலாத்காரம் உறுதி செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் தற்போது ரிமாண்ட் ஹோமுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை