தேசிய செய்திகள்

ஒடிசா ரெயில் விபத்து எதிரொலி: தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் நீக்கம்

தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஒடிசாவின் பாலாசோரில் ஜூன் 2ஆம் தேதி, சென்னை நோக்கிச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா செல்லும் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரெயில் ஆகிய மூன்று ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் 291 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பயங்கர விபத்துக்குப் பிறகு, தென்கிழக்கு ரெயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்குப் பிறகு அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

"தென்கிழக்கு ரெயில்வேயின் புதிய பொது மேலாளராக அனில் குமார் மிஸ்ராவை நியமிக்க அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது" என்று இந்திய ரயில்வே அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை