தேசிய செய்திகள்

மாநிலங்களிடம் 1.17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது - மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

மாநிலங்களிடம் 1.17 கோடி தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

மாநிலங்களிடமும், யூனியன் பிரதேசங்களிடமும் 1 கோடியே 17 லட்சத்து 56 ஆயிரத்து 911 தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று கூறி உள்ளது.

இன்னும் 3 நாட்களில் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் 38 லட்சத்து 21 ஆயிரத்து 170 தடுப்பூசிகள் வினியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுவரை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாகவும், நேரடி கொள்முதல் திட்டத்தின்கீழும் மத்திய அரசு 25 கோடியே 60 லட்சத்து 8 ஆயிரத்து 80 தடுப்பூசிகள் வழங்கி உள்ளது. இதுவரை நாட்டில் 24 கோடியே 44 லட்சத்து 6 ஆயிரத்து 96 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது நேற்று காலை 8 மணி நிலவரம் ஆகும்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்