தேசிய செய்திகள்

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவால் பாதித்த தேசிய நெடுஞ்சாலையை மீண்டும் திறக்க முடிவு

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு பாதிக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

சிம்லா,

இமாசல பிரதேசத்தில் சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் நகரில் ஜியோரி பகுதியருகே இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, பெரிய பாறைகள் உருண்டோடி சாலையில் விழுந்துள்ளன. இதனால் வாகன போக்குவரத்து பாதிப்படைந்தது.

இதனை தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பாதுகாப்பினை முன்னிட்டு மூடப்பட்டது. இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை மீண்டும் இன்று திறக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி, தேசிய நெடுஞ்சாலை அமைப்பின் இந்திய தலைமை பொறியியலாளர் கூறும்போது, காலையில் இருந்தே பெருங்கற்கள் கீழே விழ தொடங்கின.

இதனால் நாங்கள் கூடுதல் போலீசாரை குவித்துள்ளோம். இன்று மாலை தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறக்கப்படலாம் என கூறியுள்ளார். இமாசல பிரதேச அவசரகால மையம் வெளியிட்ட செய்தியில், நிலச்சரிவால் மனித உயிரிழப்புகளோ அல்லது பொருள் இழப்புகளோ ஏற்பட்டது போன்ற தகவலை தேசிய நெடுஞ்சாலை அமைப்பு வெளியிடவில்லை என்று தெரிவித்து இருந்தது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை