தேசிய செய்திகள்

பிரதமர் அலுவலகத்துறை மந்திரி ஜிதேந்திரசிங்குக்கு கொரோனா

பிரதமர் அலுவலகத்துறை மந்திரி ஜிதேந்திரசிங்குக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை தீவிரமாக பரவிவருகிறது. இதன்காரணமாக பல மாநிலங்களில் இரவுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா அரசியல் தலைவர்களையும் விட்டுவைப்பதில்லை. பிரதமர் அலுவலகத்துறை மந்திரியாக உள்ள ஜிதேந்திரசிங்குக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்துள்ளது.

இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், எனக்கு இன்று (நேற்று) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே என்னுடன் தொடர்புடைய அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மத்திய மந்திரி ஜிதேந்திரசிங், ஜம்மு காஷ்மீரின் உதம்பூர் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்