தேசிய செய்திகள்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது: பா.ஜனதா அணியில் நீடிப்போமா? என்று தெரியாது - சிவசேனா எம்.பி. சொல்கிறார்

மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது, பா.ஜனதா அணியில் நீடிப்போமா என்று தெரியாது என சிவசேனா எம்.பி. கூறினார்.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது நேற்று விவாதம் நடந்தது. அதில், சிவசேனா எம்.பி. ஆனந்த்ராவ் அட்சுல் பேசியதாவது:-

மத்திய அரசு, பாராட்டத்தக்க பணிகளை செய்தபோதிலும், சில தவறுகளையும் செய்துள்ளது. பணமதிப்பு நீக்கம், பொருளாதாரத்துக்கு பலன் அளித்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. அன்றாட தேவையை பூர்த்தி செய்ய யாரிடமும் பணம் இல்லை.

வாஜ்பாய், அத்வானி, பால் தாக்கரே ஆகியோர் தலைமை பொறுப்பில் இருந்தபோது, சிவசேனா மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது, பா.ஜனதா எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இன்று நாங்கள் பா.ஜனதா அணியில் இருக்கிறோம். நாளை நீடிப்போமா என்று சொல்ல முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு