தேசிய செய்திகள்

பயிற்சி அக்னி வீராங்கனை தற்கொலை... காதலனுடன் ஏற்பட்ட சண்டையால் விபரீத முடிவு

விபத்து மரணம் என மல்வானி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை,

கேரளாவை சேர்ந்த 20 வயது பெண் அக்னி வீரர் பணிக்கு விண்ணப்பித்திருந்தார். தேர்வு செய்யப்பட்ட அவர், கடற்படை பயிற்சி மேற்கொள்வதற்காக இரண்டு வாரங்களுக்கு முன்பு மும்பைக்கு வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை அந்த பெண்ணுக்கும் அவரது காதலனுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அப்போது காதலன் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டி உள்ளார்.

இதையடுத்து பயந்துபோன அந்த பெண் சிறிது நேரத்திற்கு பிறகு மலாட் மேற்கில் ஐஎன்எஸ் ஹம்லா தளத்தில் உள்ள அவரது விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்டார். அந்த அறையில் இருந்து பெண்ணின் உடலை போலீசார் மீட்டனர். பின்னர் விபத்து மரணம் என மல்வானி பகுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு