தேசிய செய்திகள்

“நமக்கு ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும்” - பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

நமக்கு ஓட்டு போடாதவர்களின் ஆதரவையும் பெறவேண்டும் என பா.ஜனதா எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை வழங்கி உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் பா.ஜனதா எம்.பி.க்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. 2-வது நாளான நேற்று நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசியதாவது:-

அனைவரின் நலனுக்காகவும் நீங்கள் செயலாற்ற வேண்டும். பா.ஜனதாவுக்கு ஓட்டு போடாதவர்கள் மீது எதிர்மறை எண்ணம் ஏதாவது இருந்தால் அதை விட்டுவிடுங்கள். உங்களது வேலைகள், நடத்தை ஆகியவற்றை பார்த்து அவர்களும் உங்களுக்கு நெருக்கமாக வருவார்கள். அவர்கள் ஆதரவையும் பெறுவதன் மூலமே உங்கள் தொகுதிகளை நீங்கள் 2024 தேர்தலிலும் தக்கவைத்துக்கொள்ள முடியும். இவ்வாறு மோடி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்