செய்திகள்

திருத்தணி அருகே ரெயில் மோதி பெண் சாவு

திருத்தணியில் உள்ள பஜார் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

திருத்தணி,

திருத்தணி அருகே உள்ள தும்பிகுளத்தை சேர்ந்தவர் திருபுரசுந்தரி (வயது40). பூ கட்டும் தொழிலாளி. திருபுரசுந்தரி நேற்று திருத்தணிக்கு வந்து தன் வேலைகளை முடித்து கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார். அவர் திருத்தணியில் உள்ள பஜார் ரெயில்வே கேட் அருகே தண்டவாளத்தை கடக்கும்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது.

இதில் திருபுரசுந்தரி அதே இடத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஸ்வரன், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து திருபுரசுந்தரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு