செய்திகள்

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு, முஸ்லிம் பெண்கள் கருப்பு தபால் அட்டை

முத்தலாக் தடை சட்டத்துக்கு எதிர்ப்பு: பிரதமருக்கு, முஸ்லிம் பெண்கள் கருப்பு தபால் அட்டை சென்னையில் இருந்து அனுப்பினர்.

தினத்தந்தி

சென்னை,

முத்தலாக்கை தடை செய்யும் மசோதா நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி சார்பில் பிரதமருக்கு கருப்பு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் சென்னையில் நேற்று நடந்தது.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தபால் நிலையத்தில் கட்சி நிறுவனர் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா தலைமையில் ஏராளமான முஸ்லிம் பெண்கள் ஒன்று கூடினர். பின்னர் கருப்பு வண்ணம் தீட்டப்பட்ட தபால் அட்டைகளை ஒன்று சேர்ந்து பிரதமருக்கு தபாலில் அனுப்பி வைத்தனர். அந்த தபால் அட்டையில், பல ஆயிரம் ஆண்டுகளாக முஸ்லிம்கள் பின்பற்றி வரும் ஷரியத் சட்டத்தை சீர்குலைக்கும் வகையில் முத்தலாக் தடை சட்டத்தை கொண்டு வந்துள்ள பிரதமருக்கு கண்டனம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு