சிறப்புக் கட்டுரைகள்

ரூபாய் மதிப்பில் இரும்புத்தாது ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்தது

நவம்பர் மாதத்தில் ரூ.1,409 கோடிக்கு இரும்புத்தாது ஏற்றுமதி ஆகி இருக்கிறது. சென்ற ஆண்டின் இதே மாதத்தில் அது ரூ.1,034 கோடியாக இருந்தது. ஆக, ரூபாய் மதிப்பில் ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

டாலர் மதிப்பு அடிப்படையில் அதன் ஏற்றுமதி 37 சதவீதம் உயர்ந்து 20 கோடி டாலராக அதிகரித்து இருக்கிறது. சென்ற ஆண்டு நவம்பர் மாதத்தில் அது 14 கோடி டாலராக இருந்தது.

நம் நாட்டில், சென்ற நிதி ஆண்டில் (2018-19), கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சாதனையாக 22 கோடி டன் இரும்புத்தாது உற்பத்தி ஆகி உள்ளது. முந்தைய ஆண்டில் (2017-18) அது 20 கோடி டன்னாக இருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது உற்பத்தி 9.5 சதவீதம் உயர்ந்துள்ளது. உருக்கு உற்பத்தியில் இரும்புத்தாது மிக முக்கியமான மூலப்பொருளாக இருக்கிறது. 2029-30-ஆம் நிதி ஆண்டுக்குள் கச்சா உருக்கு உற்பத்தி திறனை 30 கோடி டன்னாக உயர்த்த மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்