தமிழக செய்திகள்

1,300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,300 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

தினத்தந்தி

கொல்லங்கோடு, 

கொல்லங்கோடு போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் மற்றும் போலீஸ்காரர் சஜி ஆகியோர் நேற்று மாலையில் கண்ணனாகம் சந்திப்பில் வாகன சாதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கேரள பதிவெண் கொண்ட ஒரு மினி டெம்பா வந்தது. போலீசாரை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் இறங்கி தப்பி ஓடினார். போலீசார் அந்த வாகனத்தை சோதனை செய்த போது அதில் படகுகளுக்கு வழங்கப்படும் 1,300 லிட்டர் மானியவிலை மண்எண்ணெய் இருந்தது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வாகனத்துடன் மண்எண்ணெயை பறிமுதல் செய்தனர். அத்துடன் தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு