தமிழக செய்திகள்

தமிழகத்தில் ஐ.பி.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி ஆக உள்ள தினகரன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி-ஆக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் முக்கிய பொறுப்புகளில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன் விவரம் வருமாறு;

ஐபிஎஸ் அதிகாரி ரூபேஷ்குமார் மீனா, நெல்லை மாநகர காவல் ஆணையராக நியமனம்

மகேஸ்குமார் ரத்தோட், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக நியமனம்

சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த ராதிகா, மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக நியமனம்

மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக இருந்த செந்தில்குமாரி சென்னை குற்றப்பிரிவு ஐஜியாக நியமனம்

ஐபிஎஸ் அதிகாரி மூர்த்தி, நெல்லை சரக டிஐஜியாக நியமனம்

மேற்கு மண்டல ஐஜியாக செந்தில்குமார் நியமனம்

மேற்கு மண்டல ஐஜியாக இருந்த புவனிசுவாய், காவல் தலைமையிட ஐஜியாக நியமனம்.