தமிழக செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது

சங்கரன்கோவிலில் ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தினத்தந்தி

தென்காசி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் போலீசார் சங்கரன்கோவில்-சுரண்டை ரோட்டில் தளவாய்புரம் விலக்கு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடுவேனை மறித்து சோதனை செய்தபோது, அதில் 800 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து லோடு வேனில் இருந்த கீழப்பாவூர் வணிகப் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த பாலமுருகன் (வயது 40), தென்காசி புங்கம்பட்டி நடுத்தெருவை சேர்ந்த முத்துமாரி (33), கீழப்பாவூர் வேத கோவில் தெருவை சேர்ந்த ஆனந்த் (23) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசியுடன் லோடு வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை