தமிழக செய்திகள்

சூதாடிய 5 பேர் கைது

வளையப்பட்டியில் சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மோகனூர்

மோகனூர் அடுத்த வளையப்பட்டி பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துர்க்கை சாமி தலைமையிலான போலீசார் வளையப்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது வளையப்பட்டி சந்தை பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர் விசாரணையில் வளையப்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர்கள் சரவணன் (வயது 29), கணபதி (41), சிவசுப்பிரமணி (42), முனியப்பன் (39) மற்றும் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த அன்புச்செல்வன் (32) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டு மற்றும் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை