தமிழக செய்திகள்

சுடுகாட்டு பாதையை சீரமைக்கக்கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம்

சுடுகாட்டு பாதையை சீரமைக்கக்கோரி கருப்பு கொடி கட்டி போராட்டம் நடந்தது.

தினத்தந்தி

செந்துறை:

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே நக்கம்பாடி கிராமத்தில் உள்ள காலனி தெருவிற்கு உப்பு ஓடையை தாண்டி சுடுகாடு உள்ளது. இந்த உப்பு ஓடையில் பாலம் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஓடையில் பாலம் கட்டப்பட்டது. தரமற்ற முறையில் கட்டப்பட்ட இந்த பாலம் சில மாதங்களிலேயே இடிந்து விழுந்தது.

அதனைத் தொடர்ந்து சுடுகாட்டுப்பாதையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று தங்களது தெருக்கள் மற்றும் வீடுகளில் கருப்பு கொடி கட்டிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு