தமிழக செய்திகள்

4 வயது குழந்தையை கொம்பால் தூக்கி வீசிய காளை.. பதறவைக்கும் வீடியோ காட்சிகள்

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினத்தந்தி

அலிகார்,

உத்தரபிரதேசம் மாநிலம் அலிகாரில் தெருவில் நின்றுக் கொண்டிருந்த குழந்தையை காளை முட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானா காந்தி பார்க் பகுதியில் உள்ள தானிபூர் மண்டியில், தெருவில் 4 வயது குழந்தை நின்று கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த காளை ஒன்று, திடீரென குழந்தையை முட்டி தள்ளியது.

மேலும், குழந்தையை தலையால் தள்ளிக்கொண்டு அங்கேயே படுத்தது. சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், படுகாயமடைந்த குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே, தெருவில் சுற்றித் திரிந்த காளையை நகராட்சி நிர்வாகம் பிடித்துச் சென்றது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு