தமிழக செய்திகள்

அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்

அச்சரப்பாக்கம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பஸ்ஸில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை கும்பகோணத்தில் இருந்து 36 பயணிகளுடன் அரசு சொகுசு பஸ் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பஸ் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடமலை புத்தூர் என்ற இடத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் மட்டும் லேசான காயம் அடைந்தனர். மற்ற பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். காயம் அடைந்த 2 பேரை மீட்டு உடனடியாக அச்சரப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு