தமிழக செய்திகள்

பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்த ஸ்கூட்டர்

ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது.

தினத்தந்தி

எர்ணாவூர் மாகாளி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுமார் (வயது 70). தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து ஸ்கூட்டரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அதே பகுதியில் உள்ள முல்லை நகரில் உள்ள பள்ளத்தில் ஸ்கூட்டர் கட்டுப்பாட்டை இழந்து விழுந்தது. திடீரென ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது. அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். எனினும் ஸ்கூட்டர் முழுமையாக தீயில் எரிந்து நாசமானது. சுகுமார் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி எண்ணூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை