தமிழக செய்திகள்

நாடு முழுவதும் 3-வது நாளாக போராட்டம் நீடிப்பு லாரிகள் வேலைநிறுத்தம் தீவிரம் அடைகிறது

லாரிகள் வேலைநிறுத்தம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. இந்த போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. லாரி உரிமையாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

சென்னை,

பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். சுங்கச்சாவடிக்களை அகற்றிவிட்டு ஆண்டுக்கு ஒரு முறை சுங்கக்கட்டணம் வசூலிக்க வேண்டும். 3-ம் நபர் காப்பீடு கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்ற 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரசில் அங்கம் வகிக்கும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20-ந் தேதி முதல் இந்த போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனமும் (தமிழ்நாடு) ஆதரவு தெரிவித்துள்ளது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்காத தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் லாரிகள் வழக்கம் போல் இயங்கி வருகின்றன.

இந்த வேலைநிறுத்தம் தீவிரம் அடைந்து உள்ளது. நேற்று 3-வது நாளாக லாரிகள் ஓடவில்லை. பெரும்பாலான லாரிகள் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விவசாய விளை பொருட்களை அரசு பஸ்களில் கட்டணம் இன்றி ஏற்றிச்செல்ல அனுமதி அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு இருக்கிறார்.

இந்த வேலைநிறுத்தம் குறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் (தமிழ்நாடு) தலைவர் எம்.ஆர்.குமாரசாமி கூறியதாவது:-

லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. நாடு முழுவதும் 75 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4.5 லட்சம் லாரிகளும் ஓடவில்லை. பால், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகளை தவிர மற்ற லாரிகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளன. சரக்கு முனையங்களும் மூடப்பட்டு வருகின்றன.

பெட்ரோல் விற்பனை நிலையங்களில் 80 சதவீதம் டீசல் நிரப்புவது லாரிகள்தான். தற்போது லாரிகள் ஓடாததால் டீசல் நிரப்புவது இல்லை. எனவே பெரும்பாலான பெட்ரோல்-டீசல் லாரிகளுக்கும் வேலை இல்லாமல் நிறுத்தப்பட்டு வருகின்றன.

லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக சுங்கக்கட்டணம், காப்பீடு கட்டணம் போன்றவற்றின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்க வேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி இழப்பாக அமைந்துள்ளது. லாரி உரிமையாளர்களுக்கும் தினசரி ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது. நேரடியாகவும், மறைமுகமாகவும் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு